
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கேப்டன் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, 9 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றது. எனவே உலகக் கோப்பை தொடரில் இருந்து லீக் சுற்றோடு வெளியேறியது.
இது அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் மற்றும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் பல அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.
இதையடுத்து, உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பொறுப்பேற்று இன்சமாம் உல் ஹக் தனது கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்பின்ன, பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கலும் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு உறுப்பினர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று பதவி நீக்கம் செய்தது.
இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் அணி கேப்டன் பொறுப்பை பாபர் அசாம் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்களை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
அதில், டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கு சஹீன் ஷா அப்ரிடியும், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு ஷான் மசூத் –ம் நியமிக்கப்பட்டுள்ளனர்.