சச்சின் டெண்டுல்கரின் பள்ளித் தோழரும் கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ளி நடக்க முடியாமல் பிறர் உதவியுடன் அழைத்துச் செல்லப்படும் காட்சி சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.
சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் வினோத் காம்ளி. இவரும் சச்சினும் மும்பையில் 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் 664 ரன்கள் பார்ட்சனர்ஷிப் அமைத்து சாதனை படைத்தனர்.
அதன்பின்னர், கடந்த 1991 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்யின்போது அறிமுகமானார். பின், 1993 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
இவர் இதுவரை 104 போட்டியில் விளையாடி 2477 ரன்கள் எடுத்துள்ளார். அதில், 2 சதங்கள், 14 அரைசதங்களும் அடங்கும்.
குறிப்பாக, 17 டெஸ்டுகளில் மட்டும் விளையாடி 1084 ரன்கள் எடுத்துள்ளார். அதில்,2 முறை 200 ரன்களும், 4 சதங்கலும், 3 அரைசதங்களும் அடங்கும்.
டெஸ்ட் போட்டிகளில் இவரது சராசரி 54.2 ஆகும். சச்சினின் தோழர், சூப்பர் கிரிக்கெட் வீரர் என்று பல சிறப்புகளைக் கொண்டிருந்தாலும், உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தாதது,. சர்வதேசபோட்டிகளில் நிரூபிக்க தவறுவது உள்ளிட்ட காரணங்களால் வினோத் காம்ளி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு அவர் ஒரு பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பிசிசிஐ மாதம் தோறும் அளிக்கும் ரூ.30 ஆயிரம் ஓய்வூதியத்தை நம்பி வாழ்ந்துவருவதாக தெரிவித்திருந்தார்.
கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ளி நடக்க முடியாமல், மற்றவர்கள் கைத்தாங்களாக அவரை அழைத்துச் செல்லப்பட்டார். அவரால் நிற்கக் கூட முடியவில்லை.இதுகுறித்த வீடியோ வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
வினோத் காம்ளி பற்றி பல்வேறு வதந்திகள் பரவும் நிலையில், அவரது உடல் நலம் சீரழிந்துள்ளதால் அவருக்கு உதவ முன்வர வேண்டும் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.