Author: Seevagan

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை சீண்டும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி எக்ஸ்தலத்தில் பதிவிட்டுள்ளார்.அதில், ‘‘நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன… மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்’’‘அமைதிப்படை’ படத்தில் வரும் டயலாக் இது. அதில் வரும் ‘அமாவாசை’ கேரக்டர் தான் எடப்பாடி பழனிசாமி. பலரை ஏறி மிதித்து, ஊர்ந்து சென்று, பதவியைப் பிடித்த பழனிசாமி, ‘’திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது’’ என நேற்று பேசியிருக்கிறார்.ஆட்சியை இழந்த இந்த நான்கு ஆண்டுக் காலத்தில் அமாவாசையையென உருட்டியே அரசியல் செய்து கொண்டிருக்கிறார் பழனிசாமி.’’2024-ம் வருடம் சட்டசபைக்கும் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள் மட்டுமே ஸ்டாலின் முதலமைச்சராக இருக்க முடியும். மீண்டும் அதிமுக அரசு தமிழகத்தில் அமையும்’’ – 2022 பிப்ரவரி 12. சேலம், தாரமங்கலம். ’’இன்னும் 28 அமாவாசைகள் மட்டுமே திமுக அரசு ஆட்சியில் இருக்கும்’’ – 2024 ஜனவரி 25. எக்ஸ் தள…

Read More

மதுரையில் கட்சிக்கூட்டத்தில் பேசிவிட்டு அதிகாலையில் கோயம்புத்தூர் வருகிறார் ஜீவா.. அவரை அழைத்துச் செல்வதற்கு வரவேண்டிய தோழர்கள் இன்னும் வரவில்லை..புகைவண்டி நிலையத்தின் இருக்கையில் படுத்துத் தூங்கிவிடுகிறார், தோழர்கள் வந்து எழுப்புகிறார்கள்பசிக்குது தோழா, நாலு இட்லி வாங்கிட்டு வாங்க, சாப்பிட்டுட்டுப் போவோம் என்கிறார் ஜீவா-இங்கயே கேண்டீன் இருக்கு, சாப்பிட்டிருக்கலாமே தோழர்-சரிதான், எங்கிட்ட காசில்லைல்லதோழர் போய் இட்லி வாங்கிக் கொண்டு வர, அதை சாப்பிட்டுவிட்டு தான் கொண்டுவந்த மூட்டையை எடுத்துக்கொண்டு ஜீவா கிளம்புகிறார், கொடுங்க தோழர், அதை நான் கொண்டாரேன் என்று ஜீவாவின் கையிலிருந்த மூட்டையை வாங்குகிறார் தோழர், அப்போதுதான் அது நோட்டுகளும், சில்லறைக் காசுகளும் அடங்கிய பணமூட்டையென்பது தோழருக்குத் தெரிகிறது-இது என்னங்க ஜீவா..மதுரை பொதுக்கூட்டத்துல தோழர்களும், பொதுமக்களும் கட்சிக்காக நிதி திரட்டிக் கொடுத்திருக்காங்க என்கிறார் ஜீவா-மூட்டை நெறையா பணத்தை வச்சுக்கிட்டா பசியோட இருந்தீங்க.. இதுலருந்து எடுத்து சாப்பிட்டிருக்கலாமே ஜீவாஅதெப்படி தோழர் கட்சிக்குக் கொடுத்த நன்கொடைல நான் இட்லி வாங்கித் திங்க முடியும், அது தப்பில்லையா…

Read More

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பிரபல சித்திவிநாயகர் கோயிலில் ஹாலிவுட் நடிகை டகோட்டா ஜான்சன் சாமி தரிசனம். செய்தார்.

Read More

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் சத்யராஜின் மகள் திவ்யா.நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணாராக உள்ளார். அத்துடன், அட்சய பாத்திரம் அறக்கட்டளை என்ற என்.ஜி. ஓ அமைப்பின் நல்லெண்ணத் தூதுவராகவும் உள்ளார். இந்த அமைப்பு இந்திய அரசின் இலவச மதிய உணவுத் திட்டத்தை பள்ளிக் குழந்தைகளுக்காக நடைமுறைப்படுத்தி வருகிறது.மேலும், திவ்யா கடந்த 2020 ஆம் ஆண்டி மகிழ்மதி என்ற இயக்கத்தைத் தொடங்கினார். இது ஊட்டச்சத்து குறைபாடுள்ள மற்றும் வசதி குறைந்த மக்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை இலவசமாக வழங்கும் அமைப்பாகும்.நடிகரின் மகளாக அறியப்பட்டாலும் சினிமாவின் ஆர்வம் காட்டாமல் அதிலிருந்து விலகியே இருந்தார் திவ்யா. சென்னை பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து முதுகலைப் பட்டம் பெற்றவர் ஆவார். பாஜக ஆட்சியில் நீட் தேர்வு குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.இந்த நிலையில் ஏற்கனவே சத்யராஜ் பெரியார் ஆதரவாளராக இருந்து வரும் நிலையில்,…

Read More

கோமியம் (மாட்டின் சிறுநீர்) குடித்தால் ஜுரம் சரியாகுமென அறிவியலுக்கு புரம்பான கருத்தை பேசியசென்னை ஐ.ஐ.டி இயக்குனர் திரு.காமகோடிக்கு தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டனம்.கோமியம் (மாட்டு சிறுநீர்) குடித்தால் ஜுரம் சரியாகுமென அறிவியலுக்குப் புரம்பான கருத்தை பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடிக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு மாணவர் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “சென்னை, மேற்கு மாம்பலத்திலுள்ள கோசாலையில் 15.01.25 அன்று மாட்டுப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குனரான திரு.காமகோடி, கோமியம் (மாட்டின் சிறுநீர்) குடித்தால் ஜுரம் சரியாகுமென அறிவியலுக்கு எதிரான, ஆதாரங்கள் இல்லாத பிற்போக்கு கருத்தை பேசியிருக்கிறார். அறிவியல்படி கோமியம் (மாட்டின் சிறுநீர்) என்பதுமாட்டின் கழிவு. மேலும் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருக்கும் மாடாக இருந்தால் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய, நோயைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் அந்த மாட்டின் சிறுநீரில் இருக்கும். இதை மனிதர்கள் அருந்தினால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பலநோய்கள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று…

Read More

#நலம்விரும்பிக்குஓராண்டிற்குப் பிறகு தெலுங்கில் இருந்து தமிழில் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன்.காற்றின் முதுகில் அந்தப் பாடல் ஏறி, உலகின் காதுகளில் இசைப் பவனி வரும் அந்தச் சுப நாளுக்குக் காத்திருக்கிறேன்.காலம் சில ஏமாற்றங்களைத் தந்து நமக்குப் பாடம் கற்பித்தாலும், அதிலிருந்து ஊடுபாடுவுகிற வெளிச்சமாக அதன் அனுபவத்தை எடுத்துக் கொள்ளுகிறபோது, எதுவும் நம்மைக் கஷ்டப்படுத்தப் போவதில்லை.#சினோஜ்12-11-24

Read More

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா உடல்நிலை குறைவால் நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தொழிலதிபர்கள் சினிமா துறையினர் விளையாட்டு நட்சத்திரம் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :”பெருந்தொழிலதிபர்ரத்தன் டாட்டாவின் மறைவுக்குஇந்தியா இரங்குகிறது’நீ என்னபெரிய டாட்டாவா’ என்றுசிறு வயது முதல்புழங்கி வந்த பெயர்இன்று மறைந்துவிட்டதுஈட்டிய செல்வத்தில்சரிபாதிக்கு மேல்அறக்கட்டளை மூலம்அறப்பணிகளுக்குஅள்ளி வழங்கியஒரு கொடையாளனைதேசம் இழந்துவிட்டதுஆட்சிகள்மாறிக்கொண்டிருந்தாலும்தன் தொழில் நேர்மையைமாற்றிக்கொள்ளாத ஒருமகத்தான மனிதர்இந்திய மனிதவளத்தைத்தன் வேலைவாய்ப்புகளால்செழுமை செய்தவர்தன் நிறுவனங்களுக்குஅவர் விட்டுச் சென்றிருக்கும்தொழில் அறம்நிலைக்கும் வரைக்கும்அவர் புகழும் இருக்கும்”- என்று தெரிவித்துள்ளார் https://x.com/Vairamuthu/status/1844205872064372824?t=CxR8eX_9m7BWUoa07fMBAw&s=09

Read More

இயக்குனர் அட்லி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஜவான் இப்படத்தில் நயன்தாரா பிரியாமணி விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் ஹீரோவாக நடித்த ஷாருக்கானுக்கு Iifa -2023 திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், “எனக்கு சினிமாவைப் பற்றி பல பாடங்களை எடுத்துரைத்த மணிரத்னத் திற்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். இந்த விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. எனக்கு விருதுகளை மிகவும் பிடிக்கும். சொல்லப் போனால், நான் விருதுகளுக்கு பேராசைப் படுவேன்.என்னுடன் இந்த பிரிவுக்கு நாமினேட்டாகி இருந்த ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், விக்ரந் மாசி, விக்கி கௌஷல், சன்னி தியோல் உள்ளிட்டோருக்கு வாழ்த்துகள்;  அனைவரும் இந்த விருதுக்குதகுதியானவர்கள்தான்” என்று  தெரிவித்துள்ளார்.

Read More

பிரபல youtubeரான TTF வாசனை தன் மஞ்சள் வீரன் படத்திலிருந்து நீக்குவதாக இயக்குனர் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:”TTF வாசன் என்னுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என விரும்பினேன்; ஆனால், சூழ்நிலை ஒத்துவரவில்லை; புதிய ஹீரோ வரும் அக்டோபர் 15ம் தேதி அறிவிக்கப்படுவார். படத்தில் இல்லை என்றாலும், தம்பி TTF வாசனுடன் உறவுதொடரும்” இயக்குநர் செல்அம் அறிவித்துள்ளார்.

Read More

சில ஆண்டுகளுக்கு முன் ராமராஜன், நளினி இருவரும் விவாகரத்து பெற்றனர்.விவாகரத்து பெற்றாலும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பையும் மரியாதையும் செலுத்தி வந்த நிலையில் தங்கள் பிள்ளைகளுக்காக மீண்டும் அவர்கள் இணைந்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெயர்களாக வருகிறது. அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துதல் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்து, வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Read More