கொல்கத்தா சம்பவத்தை அடுத்து, தமிழ் நாடு அரசு அதிரடி நடவடிக்கை!
மேற்கு வங்க மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டதை அடுத்து, மருத்துவமனைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது தமிழ்நாடு மருத்துவத்துறை.
தமிழ் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் கட்டாயம் காவல்துறை மையம் அமைக்க வேண்டும், மருத்துவமனை வளாகம் முழுவதும் சிசிடிவி பொருத்த வேண்டும்.
மருத்துவமனைகளில் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக ஆலோசனை மற்றும் பாதுகாப்பு என 2 கமிட்டி அமைக்க வேண்டும்.
Also Read: மருத்துவமனையில் ஒரே ஊசியை அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்தியதால் பரபரப்பு
மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும், பார்வையாளர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இரவு நேரத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய மருத்துவமனையை சுற்றிலும் மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.
மருத்துவப் பணியாளர்களைத் தாக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பதாகை வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.