சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலின் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டு இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
பெண் காவலர்கள் பற்றி அவதூறு செய்தியை கருத்துகள் கூறிய சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பு செய்த யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை கடந்த மே மாதம் 10 ஆம் தேதி இரவு திருச்சி தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து, திருச்சி மகிளா நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீது கோவை போலீஸாரும் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில்,திருச்சி மகிளா நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமின் கிடைத்தது.
ஆனால், கோவை நீதிமன்றத்தில் இவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், இவ்வழக்கில் ஜாமின் கேட்டு, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு அப்பீல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கோவை டவுன்ஹால் காவல் நிலையத்தில் வாரந்தோறும், செவ்வாய்க்கிழமை கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஃபெலிக்ஸுக்கு ஜாமின் வழங்கியுள்ளது.
இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஃபெலிக்ஸ் ஜெரால்டு இன்று காலையில் ஜாமினில் விடுதலையானார்.