கேரளம் மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 380 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, கனமழை காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டு, முண்டக்கை என்ற கிராமமே உருதெரியாமல் அழிந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலச்சரிவில் கேரளா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிதியுதவி கோரியுள்ளார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். இந்த நிலையில், முதல்வரின் நிவாரண நிதிக்கு, நடிகர் விக்ரம், சூர்யா, ஜோதியா ஆகியோர் நிதியுதவி அளித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த நிலச்சரிவு எப்படி ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன? எந்தப் பகுதியில் இது ஏற்படும் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விடைதேடி பயணிக்கிறது என்பதைப் பற்றி இதில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
சரி, இந்த நிலச்சரிவு எப்படி ஏற்படுகிறது என்பதைப் பார்ப்போம். பூமியிகு அடியில் உள்ள பாறைகள், மணற்பரப்பு திடீரென நகரும்போது ஏற்படுவதுதான் நிலச்சரிவு.
இதில், மலைப்பகுதிகளில் கற்கள் மற்றும் மணற்பிடிப்புகள் நகர்ந்து அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக ஒரு நிலச்சரிவு ஏற்படுவதற்கு பல்வேறுபுவியியல் உருவவியல் மற்றும் தட்பவெப்பம் உள்ளிட்ட காரணங்கள் உள்ளன. அது மட்டுமின்றி, நீரியல் மற்றம் நில நடுக்கம் உள்ளிட்ட புறக்காரணிகளும், இருந்தாலும் இதற்கு மனித செயல்பாடுகளும் ஒரு காரணமாக உள்ளது.
இந்த நிலையில் பனிமலைகள் உருகுவது, அதீத மழைப்பொழிவு, மணல் அரிப்பு, நில நடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலத்தடி நீர்மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவையும் நிலச்சரிவுக்கு ஏற்பட காரணமாகின்றன.
இயற்கை சூழலில் மனித செயல்பாடுகளாலும் நிலச்சரிவுகள் உண்டாகிறது. அதீத மழை, நில நடுக்கம் உள்ளிட்டவை நிலச்சரிவ் ஏற்பட காரணிகளாக இருந்தாலும், இதற்கு மேற்பட்ட காரணங்களாலும் நிலச்சரிவு ஏற்படுகிறது.
புவியியல் ரீதியாகப் பார்க்கையில், மணற்பரப்பு, பாறை வழுவிழப்பது உள்ளிட்டவை வலுவிழப்பது என்பது பூமியின் மேற்புரமுள்ள பாறைத்தட்டுகள் பலவீனப்படுவதாகும்.
மேலும், புவியில் மரத்தின் வேர்கள் ஆழ வேரூன்றத சமயத்தில் பூமிப்பரப்பு இளகுவாக இருக்கும்போது, நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.இந்த சூழலில், அதிக கனமழை பெய்யும்போது அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படுகிறது.
தீவிரமான அல்லது நீடித்த மழைப்பொழிவு மற்றும் கசிசு ஆகியவற்றிய்றில் இருந்து சாய்வுப் பொருட்களின் செறிவூட்டலால் துளை நீர் அழுத்தத்தை உயர்த்துதல், நில நடுக்கங்களால் ஏற்படும் அதிர்வுகள், அலைகள் அல்லது நதி அரிப்பினால் பாறைகள் மற்றும் கரைகளை குறைத்தல், எரிமலை வெடிப்புகள் ஆகியவற்றாலும் நிலச்சரிவு ஏற்படுகிறது.
இந்த நில அமைப்பின்படி, வறட்சி காலக்கட்டத்தில் செடி,கொடி தாவரங்களின் பிடிப்பு அகலும்போது, மலைப்பாங்கான பகுதிகளில் மண் சரிவு ஏற்படுகிறது. நம் மனிதகுலத்தின் செயல்பாடுகளினாலும் நில்ச்சரிவு ஏற்படுவதை நம்மால் மறுக்க முடியாது.
குறிப்பாக இயற்கையான தாவரங்களை அகற்றுதல், அழித்த, இயற்கை வடிகால் குறுக்கீடு, மாற்றங்கள், கழிவு நீர் வலையமைப்பு, கசிவு குழாய்கள், சாலைகள், கட்டிடங்கள் கட்டுதல், சுரங்கம், குவாரி நடவடிக்கைகள், குண்டுவெடிப்பு அதிர்வுகள், பாறைகளின் அகழ்வாராய்ச்சி,இடப்பெயர்ச்சி ஆகியவை மனித காரணங்கள் ஆகும்.
இந்த நிலச்சரிவு என்பது ஒரு புவியியல் நிகழ்வு ஆகும். இது பாறைகள்,குப்பைகள் அல்லது பூமியின் மலைகள் அல்லது மலைகளின் சரிவுகளிலி திடீரென நகர்வதால் வகைப்படுத்தப்படுகிறது. சாய்வின் நிலைத்தன்மை சமரசன் செய்யப்படுகையில், இயற்கை நிகழ்வு ஏற்படுகிறது. இதுதான் பொருட்கள் கீழ் நோக்கி இடப்பெயர்ச்சி செய்ய காரணமாகிறது,.
இந்த நிலச்சரிவு எங்கே ஏற்படுகிறது?
மலைகள் சூழ்ந்த பகுதி, கடலோரப் பகுதிகளின் சரிவுகள் பாறைகளின் உறுதியற்ற தன்மை காரணமாக நிலச்சரிவுகள் காணப்படுகின்றன. நீர் ந்லைகளுக்கு அருகில் கடலின் அடிப்பகுதி நீரைச் சந்திக்கும் நிலச்சரிவுகள் தாழ்வுகள் அல்லது பள்ளத்தாக்குதலில், இந்த நிலச்சரிவு நிகழ்கின்றன.
மேலும், நிலச்சரிவுகள் சுனாமியை தூண்டலாம் என்று கூறபடுகிறது.
இந்த நிலச்சரிவு என்பது இயற்கை அல்லது மனித குல நடவடிக்கைகளால் காரணாமாக மண், பாறை ஆகிய பகுதிகள் வேகமாக கீழ் நோக்கி சரிவதாகும். ப் புயல், காற்று, வெள்ளம், எரிமலை, பூகத்தின் விளைவாகவும் இது ஏற்படுகிறது.
இந்த நிலையில், நிலச்சரிவை முன்கூட்டியே எச்சரிக்கும் தொழில் நுட்பத்தை கண்டறிம் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்கருவி மட்டும் சாத்தியமானால், இதற்கு முன்பு இமாச்சர பிரதேசத்தின் கன்னனூர் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் 65 பேர் உயிரிழப்பு, தற்போது கேரளாவில் வயநாட்டில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு நிகழ்ந்த மாதிரி இனிமேல் இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்காமல் இருக்கும்.
SinojKiyan