கோவையின் புதிய மேயராக 29 வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி தேர்வாகியுள்ளார்.
கோவை மா நகராட்சியில் உள்ள 100 வார்டுகளில்97 வர்டுகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கைப்பற்றினர். இதையடுத்து, கோவை மாவட்ட மேயராக கல்பனா ஆனந்த்தகுமார் பதவி வகித்து வந்தார். இவர் உடல் நலம் மற்றும் சொந்தக் காரணங்களுக்காக மேயர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது.
முன்னாள் மேயர் கல்பனாவின் கணவரின் தலையீடு இருந்ததாகவும், அவர் மீது புகார்கள் எழுந்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அடுத்து, கோவை மாவட்ட மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்த தமிழக மாநில தேர்தல் ஆணையம் கடந்த ஜூலை 25 ஆம் தேதி உத்தரவிட்டது.
அதன்படி, கோவை மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 6 ஆம் தேதி மர்றைமுகம் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், திமுக சார்பில் மேயர்வேட்பாளராக 29 வது வார்டு உறுப்பினர் ரங்க நாயகி அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.