பல்லாவரத்தில் பொது இடத்தில் தவறாக நடந்து கொண்ட வடமாநில இளைஞருக்கு தான் அணிந்திருந்த செருப்பை கழட்டி ஆவேசமாக எச்சரித்து விரட்டி அடித்த பெண்மணி.
சென்னை அடுத்த பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த பெண்மணி ஒருவர் இளைஞரை நோக்கி தனது செருப்பை கழட்டி கொண்டு ஆவேசமாக அடிக்க பாய்ந்தது அந்த பகுதியில் பரப்பரப்பு ஏற்படுத்தியது.
பல்லாவரம் பூந்தமல்லி செல்லும் பம்மல் நெடுஞ்சாலையில் எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் இந்நிலையில் அங்கு பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த பெண்மணியை வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தகாத முறையில் சீண்டியுள்ளார்.சீண்டியது மட்டும் அல்லாமல் அவரை தவறாக பேசி உள்ளார்.
இதை கண்டு கொதித்து எழுந்து அந்த பெண்மணி தனது காலில் அணிந்து இருந்த செருப்பை கழட்டிக்கொண்டு அந்த வாலிபரை ஆவேசமாக தாக்க முற்பட்டு விரட்டி அடித்துள்ளார்.
பின்னர் அங்கு காவல் பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அந்த பெண்மணி சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி உள்ளனர் இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது
இளைஞருக்கு செருப்பை காட்டி எச்சரித்த பெண்மணி
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
Next Article 8 ஆண்டுகள் பணிபுரிந்த லீமா என்ற நாய்க்கு ஓய்வு
Keep Reading
Add A Comment