கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை 2 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கி கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.
கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கடந்த 16-ம் தேதி கேரளா மாநிலம், திருச்சூரில் கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 17-ஆம் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் கேட்டு கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, சொத்து ஆவணங்கள் மோசடி வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை மூன்று நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் அனுமதி கேட்டனர்.
இந்த நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு வழக்கறிஞர் மற்றும் சிபிசிஐஏடி போலீசார் தரப்பு வழக்கறிஞர் வாதங்களைக் கேட்ட நீதிபதி பரத்குமார் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
எம்.ஆர். விஜயபாஸ்கரை 2 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி -நீதிமன்றம் உத்தரவு
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleதிருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் யோகிபாபு
Next Article கல்லூரி மாணவியை கடித்த தெரு நாய்கள்
Keep Reading
Add A Comment