மனிதப் பிறவியிலேயே மிக மோசமான நடத்தை கொண்டவராக சவுக்கு சங்கரை பார்க்கிறோம்- உச்சநீதிமன்ற நீதிபதிகள்
மனிதப் பிறவியிலேயே மிக மோசமான நடத்தை கொண்டவராக சவுக்கு சங்கரை பார்க்கிறோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தமிழக பெண் போலீஸார் பற்றி தரக்குறைவான கருத்துகளை கூறிஅதற்காக கைது செய்யப்பட்டார். அதன்பின் அவர் கஞ்ச வைத்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டது.
கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாறுபட்ட உத்தரவுகள் பிறப்பித்தனர். இதையடுத்து, சவுக்கு சங்கரின் தயார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுதன்ஷூ துலியா, அமானுல்லா அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கு பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது:
”மனிதப் பிறவியிலேயே மிக மோசமான நடத்தை கொண்டவராக சவுக்கு சங்கரை பார்க்கிறோம். தன் எல்லை மீறிய பேச்சு, நடத்தையால் எல்லாவிதமான எல்லைகளையும் தாண்டும் வகையில் சவுக்கு சங்கர் நடந்து கொண்டுள்ளார்.
ஏன், இவ்வாறு ஒழுக்கற்றமற்ற முறையில் சவுக்கு சங்கர் பேசியுள்ளார். நடந்து கொண்டார் என்று எங்களுக்குப் புரியவில்லை. அவர் இப்படி சமூக வலைதளம், ஊடகம் மூலம் கொதித்துக் கொண்டிருக்க காரணெ என்ன? அவரை கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்லுங்கள். உயர் நீதிமன்றத்தில் கூட கண்ணியமான முறையில் சவுக்கு சங்கர் நடந்து கொள்ளவில்லை என தெரிகிறது’’. என்று கூறியுள்ளனர்.
மேலும், நிறைவாக சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச சட்டத்தை ரத்து செய்யக் கோரிய அவரது தாயார்தொடர்ந்த வழக்கில் தமிழ் நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும், 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
SinojKiyan