அஜித் பவாரின் என்சிபி-யிலிருந்து 4 முக்கிய தலைவர்கள் விலகியுள்ளது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநில மக்களவைத் தேர்தல் தோல்வியின் எதிரொலியாக அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து 4 முக்கிய தலைவர்கள் சரட் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேரவுள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு அஜித்பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சரத் பவாரிடம் இருந்து பிரிந்தார். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டு அணியானது. சரத்பவார் எதிர்க்கட்சிகளுடன் இருந்த நிலையில், ஏக் நத் ஷிண்டே கூட்டணியில் இணைந்த அஜித் பவாருக்கு துணைமுதல்வர் பதவி வழங்கப்பட்டது.`
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிர மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில், முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான என்சிபி கூட்ட்ணி மஹாயுதி மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
காங்கிரஸ், சிவசேனா, சரத்பவாரின் என்சிபி, மற்றும் மஹா விகாஸ் அகாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணி அம்மாநிலத்தில் 30 ஒடங்களை வெற்றி பெற்றது.
இந்த நிலையில், மக்களவைதேர்தல் தோல்வியின் எதிரொலியாக அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து 4 முக்கிய தலைவர்கள் விலகியுள்ளது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியைச் சேர்ந்த 4 முக்கிய தலைவர்கள் அஜித் பவாரின் என்சிபி அணியில் இருந்து விலகி, சரத்பவாரின் என்சிபி அணியில் சேர உள்ளனர்.
அதன்படி, பிம்ப்ரி சின்ச்வாட் பிரிவின் தலைவரான அஜித் கவாஹனே, மாணவர் தலைவர் யாஷ் சானே மற்றும் ராகுல் போஸ்லே, பங்கஜ் பாலேகர் உள்ளிட்டோர் அஜித் பவார் அணியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அஜித் பவாருக்கு சிக்கல்…4 முக்கிய தலைவர்கள் விலகல்
Follow us on Facebook
Follow us on X (Twitter)
Follow us on Instagram
Follow us on YouTube
Follow us on Reddit
Follow us on Telegram
Previous Articleசர்தார் -2 பட ஷூட்டிங்கின் போது ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு
Keep Reading
Add A Comment