போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிற்கு ஜாமின் வழங்கி தில்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ரூ.2 ஆயிரம் கோடிக்கும் அதிமகான மதிப்புள்ள சுமார் 3,500கிலோ சூடோபீட்சின் போதைப்பொருள்கடத்தியதாக கூறப்படும் வழக்கில், பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் கடந்த மார்ச் 9 ஆம் தேதி கைது செய்தனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த நிலையில், தில்லி போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றம் ரூ.1 லட்சம் பல்வேறு நிபந்தனைகள் மற்றும் உத்தரவாத தொகையுடன் ஜாமீன்வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கின் விசாரணை முடியும் வரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை கையெழுத்திட வேண்டும் என்று, தற்போது உள்ள செல்போன் எண் மற்றும் பாஸ்போர்டை விசாரணை அதிகாரியிடம் வழங்க வேண்டும். முகவரி மாறினால் அதுபற்ரி தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது,
இவ்வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் கிடைத்தாலும், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கிலும் அவர் கைதானதால் சிறையில் இருந்து வெளியே வர முடியாது.