நேற்று முன்தினம் (ஜூன் 18) நாடு முழுவதும் நடைபெற்ற UGCNET தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம்
அறிவித்துள்ளது.
தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தேசிய சைபர்குற்றப் பிரிவில் இருந்து தகவல் வந்ததையடுத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய தேர்வுக்கான தேதி தனித் தனியாக பகிரப்படும் எனவும், இந்த
முறைகேடுகள் குறித்த விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் எனவும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
UGC NET தேர்வில் முறைகேடு அம்பலமாகியுள்ளதால், அதன் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் தேர்வை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.