கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக முன்னாள் முதல்வர் கலைஞரின் புகைப்படத்தை மயிலிறகில் வரைந்து அசித்திய ஓவியர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னார் தெருவைச் சேர்ந்த ஓவியர் கார்த்தி, இலைகள், பழங்கள் ,பென்சில், அரிசி போன்ற சிறு பொருள்களில் ஓவியம், பொருட்களில் ஒவியம் வரைவது இவருடைய திறமை , முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு இன்றுடன் நிறைவடைகிறது தமிழக முழுவதும் இது கொண்டாடப்பட்டு வருகிறது இதை சிறப்பிக்கும் விதமாக ஓவியர் கார்த்தி கலைஞரின் புகைப்படத்தை மயிலிறைகள் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக அமர்ந்து தத்ரூபமாக துல்லியமாக வரைந்து உள்ளார், இதை தனது சமூக வலைதள. பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.