மாவட்டம் கோத்தகிரியில் பச்சை பசேல் என காட்சியளித்த தேயிலை தோட்டத்தில் கருமை நிறத்தில் குட்டிகளை தோளில் சுமந்து உலா வந்த தாய் கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி கன்னிகா தேவி காலனி பகுதியில் குப்பை கிடங்கு உள்ளது இங்கு உணவு தேடி கரடி காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நாள்தோறும் உலா வருகின்றன இந்த நிலையில் நேற்று கன்னிகா தேவி காலனி பகுதியில் குட்டியை முதுகில் சுமந்து உலா வந்த கரடி இன்று மீண்டும் தேயிலை தோட்டங்களில் உலா வந்தது பச்சை பசேல் என இருக்கும் தேயிலைத் தோட்டத்தில் கருமை நிறத்தில் குட்டியை தோளில் சுமந்து தாய் கரடி நடந்து வந்ததை கண்ட பொதுமக்கள் அதை வீடியோ பதிவு செய்துள்ளனர் மேலும் அந்தப் பகுதியில் தேயிலை பணிக்காக செல்லும் தொழிலாளர்கள் கரடியின் நடமாட்டத்தால் அச்சமடைந்துள்ளனர் வனத்துறையினர் குட்டியுடன் சுற்றி திரியும் கரடியை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .