
இளைஞர் மத்தியில் ரத்த வெறியைத் தூண்டுகிறார் என ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் தி கோட். இப்படத்தின் முதல் சிங்கில் விசில் போடு என்ற பாடல் தமிழ்ப்புத்தாண்டு தினத்தைய்யொட்டி, நேற்று மாலை இப்பாடல் வெளியாகி. இதுவரை 2 கோடி பார்வையாளர்கள் இப்பாடலை பார்த்துள்ளனர். 1 மில்லியன் லைக்ஸுகள் பெற்றுள்ளது.
இந்த நிலையில், டிரெண்டிங்கில் நம்பர் 1ல் உள்ள இப்பாடலைப் பாடிய நடிகர் விஜய் மீது, இளைஞர் மத்தியில் ரத்த வெறியைத் தூண்டுகிறார் என ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் அளிக்கப்பட்டுள்ள அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
‘’நடிகர் விஜய் அவர்கள் பிரச்சனையை தூண்டுதல், போதை பொருட்களை ஆதரிக்கும் வகையிலும்தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். லியோ திரைப்படத்தில் கூட போதை பொருளை ஆதரித்து பாடல்வெளியிட்டார் என்பதையும் இங்கு சுட்டி காட்டுகிறேன்.
தற்போது அனைத்து இணையதளங்கள்வழியாக வெளியாகியுள்ள விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய பாடல் வரிகள் நாட்டில் கலவரத்தை
ஏற்படுத்தும் வகையிலும், மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் பாடியுள்ளார்.
குறிப்பாக பார்ட்டிஒன்னு தொடங்கட்டுமா? என்ற வரியில் தணிக்கை குழு வாரிய சட்டத்தின்படி போதை பொருள் மற்றும்மதுபான பாட்டில்கள் காட்சிகளாக இடம் பெறும் இடங்களில் விழிப்புணர்வு வாசகம் வைக்க வேண்டும்,
ஆனால் நடிகர் விஜய் அதை வைக்கவில்லை.! அதிரடி கலக்கட்டுமா? சேம்பைன் தான் தொறக்கட்டுமா? தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் மற்றும் ரவுடியிசத்தை ஆதரிக்கும் வகையில் அதிரடி காட்டட்டுமா என்ற வரியும் இடம்பெற்றுள்ளது.
மைக்கை கையில் எடுக்கட்டுமா? தமிழக அரசியலில் சில தலைவர்களை சுட்டிக்காட்டும் வகையில் குறிப்பாக சீமான் நடிகர் கமல் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற நடிகரை சுட்டிக்காட்டும் வகையில் மைக்கை கையில் எடுக்கட்டுமா என்ற வாசகத்தை ஒருவர் மனதை புண்படுத்தும் வகையிலும் மற்றும் வார்த்தைகளாலும் துன்புறுத்தும் வகையிலும் உள்ளது.
’இடி இடிச்சா என் வாய்ஸ் தான் வெடி வெடிச்சா என் பாய்ஸ் தான்’, நடிகர் விஜய் மீது யார் புகார் கொடுத்தாலும் அவர்கள் நற்பணி இயக்கத்தை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டும் தொணியில் வெடிச்சா என் பாய்ஸ் தான் என்ற வார்த்தையால் மிரட்டுகிறார் நடிகர் விஜய்.
குடிமகன் தான் நம் கூட்டணி, நடிகர் விஜய் மணிப்பூர் கலவரத்தில் குரல் கொடுக்கவில்லை. குறிப்பாக நாட்டில் எது நடந்தாலும் கண்டும் காணாமல் தன் படத்திற்காக வாயை திறக்கும் நடிகராக் நடிகர் விஜய் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.
ரத்தம் பத்தட்டும் விசில் போடு ஹே நண்பா நண்பி விசில் போடு என்று இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் வகையில் நடிகர் விஜய் செயல்பட்டு வருகிறார். :
சமீபத்தில் நடிகர் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கி வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்த நிலையில், இவரது இதுபோன்ற பாடல்களுக்கு சமூக ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் விஜய்யை விமர்சித்து வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#EditedBySinoj
மேலும் இதுபோன்ற செய்திகளுக்கு @cineyukam பக்கத்தை follow செய்யுங்கள்….