
நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத்தி சிங், இஷா கோப்பிகர், ஆகியோர் நடிப்பில், ஆர். ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், நிரவ் ஷா ஒளிப்பதிவில், ஆர்.டி.ராஜா மற்றும் ஜே. ராஜேஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் அயலான்.
இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருந்த நிலையில், இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதம் காரணமாக அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிரபல ஊடக நிறுவனத்தின் மீது அயலான் பட தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் விமர்சனம் வைத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் தங்கள் ‘எக்ஸ்’ என்ற வலைதள பக்கத்தில்,
”சிக்கல் இல்லாத அயலான், மீளுமா ஊடக தர்மம்?
இந்த வாரம் ‘குமுதம்’ வார இதழ் நிறுவனம் ‘அயலான்’ திரைப்பட வெளியீட்டில் சிக்கல் இருப்பதாக பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது. இதற்கு விளக்கம் கேட்டு அந்நிறுவனத்தை தொடர்புகொண்டபோது, ‘தாங்கள் நீண்டகாலமாக அயலான் திரைப்படத்தின் exclusive செய்திக்காக பின்தொடர்ந்ததாகவும் ஆனால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் ‘ஆனந்த விகடன்’ நிறுவனத்திற்கு exclusive செய்திகளை கொடுத்ததால் தான் இந்த வார இதழில் அப்படியான செய்தியை வேண்டுமென்றே வெளியிட்டதாகவும் கூறுகிறார்கள். இதுவா உங்கள் பத்திரிக்கை நிறுவனத்தின் தர்மம்?
ஒரு திரைப்படத்தின் முக்கிய செய்தியை எதில் ஊடகப்படுத்த வேண்டும் என்ற சுதந்திரமும், உரிமையும் அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடையாதா? இதற்காக அந்த திரைப்படத்தை பற்றி வதந்தி பரப்புவது ஒருவித வன்முறை ஆகாதா?

இதுபோன்ற கீழ்மையான செயலை இனிமேலும் எந்த திரைக் கலைஞர்களுக்கும், திரைப்படங்களுக்கும் செய்யாமல் இருக்குமாறு குமுதம் நிறுவனத்தை கேட்டுக்கொள்கிறோம்’’என்று தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு எங்களை பின்தொடரவும், எங்களை தொடர்புகொள்ள, உங்களை கருத்துகளை [email protected] என்ற ஜிமேயில் முகவரியில் தெரிவிக்கலாம்.
எல்லா சோசியல் மீடியாவிலும் cineyukam என்ற இந்த மீடியாவை நீங்கள் பின்தொடலாம்.