
மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா பற்றி ஒரு பேட்டியில் பேசிய வீடியோ வைரலான நிலையில், இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடிகை திரிஷா, சக நடிகர்கள், தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார சிரஞ்சீவவி மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என நடிகை குஷ்பு தெரிவித்த நிலையில், நேற்று தேசிய மகளிர் ஆணையம் தாமாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்தது.
இதையடுத்து, லியோ பட தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில், திரிஷா மீதான புகாரில் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேசிய மகளிர் ஆணையம் வழக்குப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்திய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.