
நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா பற்றி ஒரு பேட்டியில் பேசிய வீடியோ வைரலான நிலையில், இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடிகை திரிஷா, சக நடிகர்கள் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்ட பலரும் மன்சூர் அலிகானுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் கூறியதாவது:’’ மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். பெண்களையும், அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பு தேசிய மகளிர் ஆணையத்தின் கடமை’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் இன்று தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. விரைவில் அவர் மீது நடவடிக்கை பாயும் என தெரிகிறது.