
உலகக்கோப்பை 2023 இந்தியாவில் நடைபெற்ற நிலையில், நேற்றைய இறுதிப் போட்டியில்( குஜராத் – நரேந்திரமோடி மைதானம்) ஆஸ்திரேலியா, இந்தியா இடையே நடந்தது.
இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
எனவே இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் 240 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவிலேயே 3 பேர் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.
அதன் பின்னர் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஷான் ஜோடி 190க்கும் மேல் ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி தேடித் தந்தனர்.
எனவே மூலம் 43ஆவது ஓவரில் ஆஸ்திரேலிய இந்தியா வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் ஏன் சினிமா பிரபலங்களுக்கும்கூட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பிரபல இயக்குனர் செல்வராகவன் தன் வலைதள பக்கத்தில்,
‘’நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை.பாவம்.
அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடிய வில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது.
நெஞ்சம் உடைந்து சிதறியது’’என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் இது சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இந்திய அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் சாப்ட்வேட் இன்ஜினியர் ஜோதிஷ்குமார் யாதவ் மாரடைப்பால் பலியானதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ‘’பருத்திவீரன், ஆதிபகவன், மெளனம் பேசியதே உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் அமீர், கண்ணீர் விட்டு அழ தோற்றது தேசம் அல்ல. கிரிக்கெட் வாரியம் தான்’’ என்று தெரிவித்துள்ளார்.